நேற்று மாலை தெமர்லோவின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து சுமார் 75 வீடுகள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் மாலை 5 மணியளவில் நிகழ்ந்ததாகவும், ஜாலான் மாரான் வழியாக Taman Sri Kerinau, Kampung Pulau Terap, Taman Pamah Kasih, Taman Pulai Bistari மற்றும் Kampung Batu 4 1/2 ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, மேலும் தெமர்லோ மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, இதுவரை தற்காலிக நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை” என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.