கிளாங் பள்ளத்தாக்கில் ஒரு நெடுஞ்சாலையின் கட்டட பணிக்காக சுகுக் நிதிகளை தவறாக பயன்படுத்தியதாகச் சாட்டப்படும் வழக்கில் மையமாக உள்ள தன்ஸ்ரீவை, ஊழல் தடுப்புத் தரப்பினர் நாளை விசாரிக்கவுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அவரிடம் உரை பதிவுசெய்யும் நடவடிக்கையை புட்ராஜெயாவில் உள்ள தலைமையகத்தில் மேற்கொள்ள இருப்பதாக ஒரு வட்டார தகவல் தெரிவித்துள்ளது.
"ஆம், அவர் நாளை காலை 9 மணிக்கு மன்றத்தில் முன்னிலையிலிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
"மருத்துவமனையில் சிகிச்சையை முடித்து அவர் வெளியேறியுள்ளார்," என அந்த வட்டாரத் தகவல் தெரிவித்தது.