Offline

LATEST NEWS

UPSI பேருந்து விபத்து: ஓட்டுநர் மட்டுமல்ல, பேருந்து நிறுவனமும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் அஸாலீனா
By Administrator
Published on 06/16/2025 09:00
News

கோலாலம்பூர்:

15 உப்சி மாணவர்களின் உயிரை காவு கொண்ட பேருந்து விபத்திற்குப் பேருந்து ஓட்டுநர் மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் துறை சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அசாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.

விபத்து என்பது தனிநபரால் மட்டுமே நிகழ்வது அல்ல. அதில் தொழில்நுட்பப் பிரச்சனைகளும் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூரினார்.

ஓட்டுநரைத் தண்டிப்பதால் மட்டும் இம்மாதிரியான விபத்துகள் தடுக்கப்படுமா என கூறிய அவர், ஒரு பாலம் இடிந்து விழுந்தால் அப்பாலத்தைக் கட்டிய பொறியியலாளர் மட்டுமல்ல, அதன் குத்தகையாளரையும் கைது செயவதைச் சுட்டிகாட்னார்.

பேருந்து விபத்திலும் ஓட்டுநர் மீது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

Comments