குபேரா ஆடியோ விழாவில் தனுஷ் தன்னை பரிதாபமாகக் காட்டிய உரை தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது. ஆரம்பத்தில் அவர் கண்ட கஷ்டங்களை நினைவுபடுத்தியதோடு, தற்போது பாலிவுட் செல்லும் முன்னே தமிழ் சினிமாவில் தன்னைச் சுற்றிய விமர்சனங்களைத் துடைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் இப்படி பேசுவது ஏன் என்றே கேள்வி எழுகிறது.