தொடர்ந்து குட்டுப்பட்டு கொண்டிருந்த மருமகள்கள் குணசேகரனின் ஆட்டம் தாங்க முடியாமல் சீறி வருகிறார்கள். ஜெயிலிலிருந்து வெளிவந்தது கூட தெரியாமல் சர்வ சாதாரணமாக துப்பாக்கியை தூக்கி மிரட்டுகிறார். இது அவருக்கு தான் ஆபத்து என புரியவில்லை.
சுட்டுப் பார் என்று ஜனனி பெண் சிங்கம் போல் திமிரி நிற்கிறார். அதையும் தாண்டி நேற்று அவரது மனைவி ஈஸ்வரி காட்டிய கோபத்தால் கதி கலங்கி போனார் மல்லுவேட்டி மைனர். ஒருத்தரையும் விடமாட்டேன் முடித்து விடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் இந்த குணசேகரன்.ஒரு கட்டத்தில் வீட்டுப் பெண்களுக்கு நண்பனாய் உதவி செய்து கொண்டிருக்கும் ஜீவானந்தத்தை போட்டு தள்ளி விடுவேன் என குணசேகரன் கூறியதைக் கேட்டதும் பொங்கி எழுந்த ஈஸ்வரி போட்ட போடால் அவருக்கு மூஞ்சே செத்துப் போனது
ஜீவானந்தத்திற்கும் அவரது மகளுக்கும் உங்களால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இதுவரை பார்க்காத ஈஸ்வரியை நீங்கள் பார்ப்பீர்கள். எங்கு எதை செய்ய வேண்டுமென எனக்கு தெரியும், எந்த எல்லைக்கும் போய் உங்களை மாட்டி விடுவேன் என ஈஸ்வரி நெருப்பாய் மாறினார்.
ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் மற்றும் அவரது தம்பி கதிர் தான் கொன்றார்கள். இது ஈஸ்வரிக்கு தெரியும். இதைத்தான் அவர் சூசகமாக சொல்லி குணசேகரனை பயத்தில் நடுங்க வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சர்வமும் அடங்கிப் போய் நிற்கிறார் பரோல் பாண்டியன்தனுஷ் படத்தை இயக்கிய டைரக்டர் ஒருவர் கிட்னி பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 25 லட்சம் அளவுக்கு ஹாஸ்பிடல் பில் வந்திருக்கிறது.
இவ்வளவு தொகையை கட்ட முடியாத அவருடைய குடும்பத்தினர் எங்கெங்கோ உதவி கேட்டு போயிருக்கிறார்கள். இறுதியில் தனுஷிடம் கேட்போம் என அவரிடம் நிலையை சொல்லி உதவி கேட்டிருக்கிறார்கள்.
பணத்தாசை பிடித்தவரா தனுஷ்.?
உடனே அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய கார்டை எடுத்து கொடுத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஸ்வைப் செய்து கொள்ளுங்கள் என சொல்லி இருக்கிறார். இதன் மூலம் இயக்குனர் பெரும் பிரச்சனையிலிருந்து விடுபட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தான் இது. ஆனால் தற்போது வைரலாகி வருகிறது. வேறு எந்த ஹீரோவும் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தனுஷ் மனிதாபிமானம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என நிரூபித்து விட்டார். அப்படிப்பட்டவரை பணத்தாசை பிடித்தவர் என வெற்றிமாறன் சிம்பு பட விவகாரத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
உண்மையில் தனுஷ் இது போல் பலருக்கு உதவி செய்திருக்கிறார். ஆனால் அதை அவர் வெளியில் காட்டிக் கொண்டது கிடையாது. சிலர் எந்த உதவி செய்தாலும் உடனே பகிரங்கப்படுத்தி விடுகிறார்கள்.
ஆனால் தனுஷ் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறார். அது புரியாமல் அவரை நோகடிக்கும் விதமாக நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வருகிறது என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.