Offline
Menu
கரோக்கே அறைகள் மூலம் போதைவியாபாரம் செய்த கும்பல் கைது.
By Administrator
Published on 07/05/2025 09:00
News

ஜோகூரில் கரோக்கே அறைகள் போல மாற்றியமைக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பிடித்தனர்.  ஜூன் 20-21ம் தேதிகளில் நடைபெற்ற அதிரடியில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் சிங்கப்பூரை சேர்ந்த 64 வயதான நபர் உட்பட 5 வெளிநாட்டவர்கள் உள்ளனர். நாயகன் என நம்பப்படும் 52 வயது மலேசியர் உட்பட நான்கு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.மொத்தமாக RM1.7 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் RM1.9 மில்லியன் மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து சந்தேகப்படுபவர்கள் மீதும் கொடிய போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments