கோலாலம்பூர்,
மலேசிய இந்தியர்களின் குறிப்பாக பி40 பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் ஒதுக்கி வரும் 100 மில்லியன் ரிங்கிட் அந்த சமுதாயத்தைச் சென்றடைவதில் மிகப் பெரிய தாமதம் ஏற்பட்டிருப்பது ஏன் என்று பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2025 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் இன்றளவும் இந்திய சமுதாயத்தில் தேவைப்படும் தரப்பினருக்கு இன்னும் போய்ச்சேரவில்லை. மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான ப.பிரபாகரன் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விரைந்து தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.