மலேசியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பலன்களை வழங்கும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு சிறப்பு அறிவிப்புக்களுக்கு மத்திய அமைச்சர்கள் சிலர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி பாராட்டினர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ஒரே தடவை உதவித் தொகையான 100 ரிங்கிட் ரொக்கம் உட்பட ரோன் 95 பெட்ரோல் விலை குறைப்பும் அதில் அடங்கும்.
பிரதமரின் இந்த நடவடிக்கையானது மலேசிய மக்களின் நலன்களில் மத்திய அரசாங்கத்தின் அக்கறையை காட்டுவதாகவும் அவர்களின் நிதிச் சுமையை குறைப்பதாகவும் இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.