ஜோகூர் பாரு,
2024ஆம் ஆண்டில், மொத்தம் 38,804 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) MADANI குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் மானியம் (GDPM) திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் RM89.6 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என துணைத் தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பை பெறுபவர்களில் 2,838 மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இது மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) தரவின்படி, நாடு முழுவதும் உள்ள அந்த வகை நிலையங்களில் சுமார் 19% ஆகும்.
“இந்த சாதனை, GDPM திட்டம் MSME-களை டிஜிட்டல் சேவைகளுக்கு மாற்றுவதில் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த ஆண்டு, நாங்கள் சுகாதார துறையில் கவனம் செலுத்தி, குறைந்தது 50% தனியார் கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களைச் சேர்க்கும் இலக்கை வைத்துள்ளோம்,” என்று அவர் GDPM Fest 2025 செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு, அரசு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மூலம் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்துக்கு (MCMC) RM90 மில்லியன் வழங்கியதுடன், பெரும்பாலான நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு, நிதியமைச்சகம் கூடுதலாக RM50 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இதில் RM30 மில்லியன் MCMC-க்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் MSME-களை மேலும் வலுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இது 13ஆம் மலேசிய திட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும்.
MCMC ஏற்பாடு செய்த GDPM Fest 2025 நிகழ்ச்சி, குறிப்பாக சுகாதார துறையில் உள்ள MSME-கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பிந்திய நிலைக்கு செல்லாமல் இருப்பதை உறுதிசெய்யும் அரசின் உறுதியைக் காட்டுகிறது. இந்த முயற்சி, திறமையான, அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்துக்கு தயாரான.