செமினியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் 14ஆவது மாடி பால்கனியில் இருந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார். காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் யூசோஃப், இந்த சம்பவத்தை அப்பகுதியில் ரோந்து சென்ற ஒரு பாதுகாப்பு காவலர் நேரில் பார்த்ததாகக் கூறினார்.
48 வயதான அந்த நபர் வாகன நிறுத்துமிடத்திற்கு விழுவதற்கு முன்பு தனது பால்கனியில் அமர்ந்திருப்பதை அவர் கண்டார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். தலை மற்றும் தொடையில் பலத்த காயங்களால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி மு’ஆஸ் மஸ்லானை 017-9788804 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு நாஸ்ரோன் வலியுறுத்தினார்.