Offline
Menu
பேராக் சுல்தானை நோக்கி ஓடிய பெண்: அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை
By Administrator
Published on 09/03/2025 09:00
News

பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மீறலைத் தொடர்ந்து, அதிகாரிகளின் மீதும் உடன் வந்த பணியாளர்கள் மீது போலீசார் நேற்று ஒழுங்கு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஏதேனும் அலட்சியம் கண்டறியப்பட்டால், மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு முழுமையான விசாரணையை அனுமதிக்க முறையான ஒழுங்கு விசாரணை தொடங்கப்படும் என்று பேராக் காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

குறுகிய, நீண்ட கால நிர்வாக நடவடிக்கைகளை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியதாக  டிவி3 செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் இன்னும் பணியில் உள்ளனர். சம்பவம் தொடர்பான தொடர் நடவடிக்கை குறித்து விவாதிக்க அரண்மனையுடன் நாளை ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

Comments