தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால், நாட்டை வியக்க வைக்கும் வகையில் தொழில்நுட்பப் புரட்சி ஏற்படும் என்றும், குறிப்பாகத் தமிழ்நாடு இந்தியாவின் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தலைநகராக மாற்றப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்:
தொழில்நுட்பப் புரட்சி மற்றும் நிர்வாக மாற்றங்கள்:
AI அமைச்சகம்: இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கெனத் தனி அமைச்சகம் (AI Ministry) உருவாக்கப்படும்.
AI நகரம் மற்றும் பல்கலைக்கழகம்: உலகத்தரம் வாய்ந்த ‘ஏஐ நகரம்’ (AI City) மற்றும் பிரத்யேக ஏஐ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கவும், இடைத்தரகர்கள் இன்றி நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையவும் ‘ஏஐ’ தரவுகளுடன் கூடிய புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.
வெளிப்படையான நிர்வாகம்:
நிர்வாகச் சீர்திருத்தம் குறித்துப் பேசிய அவர், “தற்போது அரசின் நிதி எங்கே செலவிடப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரிவதில்லை. தவெக ஆட்சியில், அரசின் நிதிநிலையை இணையதளம் வாயிலாக மக்களே நேரடியாகக் கண்காணிக்க முடியும். மேலும், அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஆலோசனைகளை வழங்கும் நேரடி ஜனநாயக முறை அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
காரைக்குடி கூட்டத்தில் பேச முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டிய அவர், தனது ஆட்சியில் லஞ்சம் என்பது வரலாறாக மாற்றப்படும் என்று உறுதியளித்தார்.