ரோம், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
வெளியூர்களில் இருந்து குவியும் இளைஞர்கள்
இதற்கிடையே நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.
போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை விட்டு இன்னும் வெளியேறவில்லை என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆத ரவு தெரிவிக்க தினமும் ஏராளமான இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஜந்தர் மந்தரை சுற்றி இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரெயில் சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. அதாவது அங்குள்ள 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருந்தாலும் இளைஞர்கள் எப்படியோ அங்கு வந்து விடுகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருவது, டெல்லியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இதற்கிடையே இன்று இவர்களது போராட்டம் 35-வது நாளாக எட்டி உள்ளது. இந்த போராட்டத் துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
இதனிடையே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிஜேபி கட்சியினர் கூறுகையில்,
நாளை வரை நேரம் கேட்ட மத்திய அரசு, 2 கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்துள்ளது. பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். போராட்டகாரர்கள் மீதான எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நீட் மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும். மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையை டெல்லி போலீஸ் கைவிட வேண்டும். பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் என கூறினார்.
2 மணி நேரம் போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்ட குழுவின் கோரிக்கை குறித்து விவாதித்தோம். போராட்ட குழுவின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என மத்திய மந்திரி ஜே.பி. நட்டா கூறினார்.