Offline
பத்துமலையில் குர்ஆன் ஓதிய சம்பவம்: அப்தெல்லதிஃப் ஓய்சா போன்றவர்கள் நாட்டிற்கு நுழைய தடை விதிப்பீர்
News
Published on 05/27/2024

பத்துமலை ஆலயத்திற்கு முன்னால் குர்ஆன் வசனங்களை ஓதும் வீடியோவைப் பகிர்ந்த  அப்தெல்லதிஃப் ஓய்சா போன்றவர்கள் மலேசியாவிற்குள் நுழைவதை தடுக்குமாறு உள்துறை அமைச்சர் சைபுஃதீன் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு உலக மனித உரிமைகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தில் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் அவரது நோக்கம் என்ன? இது இஸ்லாம் அல்லாத ஒரு மதத்தை அவமதிப்பதும் கேலி செய்வதும் தெளிவான நோக்கமாக இருக்கிறது. நேற்று, பத்து மலை ஒரு சமயரீதியான இடமாக இருப்பதை விட ஒரு வரலாற்று தளம் என்று தான் கருதுவதாகவும், 42.7 மீ உயரமுள்ள இந்த சிலை ஒரு இந்து கடவுளான முருகனின் சிலை என்பது தனக்கு தெரியாது என்றும் அப்தெல்லதிஃப் கூறியது ஏற்புடையதா என்று சஷி கேள்வி எழுப்பினார்.

மடானி அரசாங்கம் 3R (இனம், மதம் மற்றும் ராயல்டி) பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமாக இருந்தால், இனம் மற்றும் மதத்தை அவமதிக்கும் இதுபோன்ற செயல்களை மன்னிக்கக்கூடாது என்றும், உள்துறை அமைச்சர் அப்தெல்லதீஃப் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். ஜிம்பாப்வே போதகர் இஸ்மாயில் மென்க், அமெரிக்க முஸ்லிம் போதகர் யூசுப் எஸ்டெஸ் மற்றும் மலேசியாவின் ஹஸ்லின் பஹாரிம் போன்ற தனிநபர்களின்  கடுமையான மற்றும் பிளவுபடுத்தும் போதனைகள் காரணமாக சிங்கப்பூர் தடைசெய்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

Comments