Offline
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ‘சாலை’யில் கிடந்த சிறுமி.. கூட்டுப் பலாத்கார கோரம்
News
Published on 10/16/2024

பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

நேற்று [திங்கள்கிழமை] அதிகாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சின்ஹாட் சாலையில் மோசமான நிலையில் கிடந்துள்ளார். லாலுளாய் [Laulaai] கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி கிராமத்தில் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து உடல் உபாதையை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர். அப்போதே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த அவர் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

வீட்டை விட்டு அதிகாலை வெளியே வந்த சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அவளின் கை கால்களைக் கட்டி சாலையில் வீசிச் சென்றுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. லோஹியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Comments