Offline
கனமழை; தாமான் மலாவதி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு
News
Published on 10/16/2024

கோலாலம்பூர்:

இன்று அதிகாலையில் பெய்த கனமழையால் கோலாலம்பூரின் அம்பாங்கிலுள்ள தாமான் மலாவதி குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

@HilalAzmi X இல் வெளியிட்ட பதிவின்படி, ஜாலான் E6 இல் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 30 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அந்தப்பதிவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கோலாலம்பூரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 

Comments