நெகிரி செம்பிலானில் உள்ள ரமலான் சந்தையில், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டறியின், அந்த வணிகர்கள் உடனடியாக கடைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இந்த விதியை மீறும் வணிகர்கள் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, எதிர்காலத்தில் ரமலான் சந்தைகளில் செயல்பட தடை விதிக்கப்படும் என ஜே. அருள் குமார் எச்சரித்துள்ளார். அதேபோல், கடைகள் மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடப்படும் நிலைமைக்கு எதிராக சம்மன் அனுப்பப்படும் என்று சிரம்பான் மேயர் டத்தோ மஸ்ரி ரஸாலி அறிவித்துள்ளார்.