Offline
மலேசியா ASEAN தலைமை ஏற்றிருப்பதால் வேலை வாய்ப்பு மோசடி
Published on 02/19/2025 11:30
News

மலேசியா ASEAN தலைமை ஏற்றிருப்பதால் வேலை வாய்ப்பு மோசடி விவகாரத்தை முறியடிப்பது மிக எளிது

கோலாலம்பூர், 

2025 ஆசியான் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றிருக்கிறது. தென் கிழக்காசியாவில் பரவலாக நிகழ்ந்து வரும் வேலை மோசடி விவகாரத்தை மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்று வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ முகமட் அலாமின் கூறினார்.

அண்மையில் லங்காவியில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாண்டு முறியடிப்பது என்பது குறித்தும் அங்கு பேசப்பட்டது என்று அவர் சொன்னார். ஆசியான் போலீஸ் அமைப்பின் வழி இந்த விவகாரத்தைக் கையாளும் ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியா ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் காலம் முழுவதும் இந்த விவகாரத்தில் அதீத கவனம் செலுத்தப்படும். முறையாக விவாதிக்கப்பட்டு சாத்தியப்பூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படும். வேலை மோசடி, ஏமாற்றுக் கும்பல்களை முறியடிப்பதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில் முகமட் அலாமின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்தோனேசியா, பின்னர் லாவோஸ் ஆசியான் தலைமைத்துவக் காலத்தில் இவ்விவகாரத்திற்கு முன்னுரிமை தரப்படும் என்று கேள்வி நேரத்தின்போது தம்பின் எழுப்பப்பட்டிருக்கிறது. இவ்வாண்டும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் இஸாம் முகமட் இசா எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு மோசடி விவகாரத்தை முறியடிப்பதில் ஆசியான் நாடுகளுடனான ஒத்துழைப்பின்வழி மியன்மார் மலேசியர்கள் உட்பட 320 வெளிநாட்டுப் பிரஜைகளை ஒப்படைத்திருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments