PKR துணைத் தலைவர் ரஃபிசி ரம்லியின் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்துள்ளது கட்சியின் மத்திய தேர்தல் குழு (JPP). 2025க்கான கட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் eKYC செயல்முறை மூலம் சரிபார்க்கப்பட்டதாகவும், முற்றிலும் வெளிப்படையாக தயாரிக்கப்பட்டதாகவும் JPP விளக்கியது.
289 புகாருகள் பெற்றதாகவும், அவை ஒவ்வொன்றும் கட்சி விதிமுறைகளுக்கிணங்க கையாளப்பட்டதாகவும் தெரிவித்த JPP, ஆறு கிளைகளின் வாக்குப்பதிவுகள் மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளன என்றும், இது சர்வதேச கணக்காய்வாளரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என கூறியது.
e-வோட்டிங் முறையில் எந்தவொரு கோளாறும் இல்லை என அந்த கணக்காய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக JPP தெரிவித்தது.
முன்னதாக, ரஃபிசி, பிற கட்சியினரை பரிசோதனை இன்றி போட்டியிட அனுமதித்ததாக தேர்தல் குழுவை விமர்சித்திருந்தார். இதற்கிடையில், பிற கட்சிகளுக்கு சேர்ந்ததாக தெரியவந்த 28 உறுப்பினர்கள் PKRயில் இருந்து வெளியேற்றப்பட்டதாக Dr. சாலிஹா அறிவித்துள்ளார்.