மலாக்கா டுரியான் துங்காவில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டதச புஜ காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா, பக்தர்கள் கடலலைபோல் திரண்டமையுடன் கோலாகலமாக நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு இராஜகோபுரம் உள்ளிட்ட கலசங்களுக்கு வேத பாராயணம், நாதஸ்வரம் இசை மத்தியில் கும்பாபிஷேகம் நடந்தது.அம்மா சிவஸ்ரீ சண்முகநாதன் சுவாமிகள் தலைமையிலான குருமார்கள் குழு விழாவை வழிநடத்தினர். 140-க்கும் மேற்பட்ட குருமார்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அழகிய திருக்கோவில் வடிவமைப்புடன் அமைந்துள்ள இந்த ஆலயம், ஆன்மிக வளர்ச்சி, கலை, கலாசாரம், சமூக நலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அம்மா அவர்கள் நன்றியுடன் தெரிவித்தார்.