மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் மற்றும் மகாராணி ராஜா சாரித் சோஃபியா, ஜாலான் ஜெலி-கெரிக் சாலையில் இன்று நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தோர் விரைவில் மீண்டுவர பிரார்த்திப்பதாகவும், இந்த சோகம் நிறைந்த தருணத்தில் குடும்பங்களுக்கு உறுதி மற்றும் மனதை தாங்கும் சக்தி வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.யுபிஎஸ்ஐ மாணவர்கள் பயணம் செய்த பேருந்தும், பெரோடுவா அல்ஸா வாகனமும் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.