Offline
மாணவர்கள் வாடகைக்கு எடுக்கும் பேருந்துகள்,விபத்துக்குப் பிறகு நடைமுறை விதிகள் மறுபரிசீலனை – ஜாம்ரி!
By Administrator
Published on 06/10/2025 09:00
News

15 பேர் உயிரிழந்த மாணவர் பேருந்து விபத்தையடுத்து, மாணவர்கள் வாடகைக்கு எடுக்கும் பேருந்துகள் தொடர்பான நடைமுறை விதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மறுபரிசீலிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.முக்கிய அமைச்சுகள் இணைந்து விரைவான உதவிகளை ஏற்பாடு செய்துள்ளன. உயர் கல்வி அமைச்சகம் RM2,000 மற்றும் யுபிஎஸ்ஐ RM1,000 நிதி உதவியாக வழங்கியுள்ளது. தற்காலிக இழப்பை தாங்க கடும் வலி மிக்க தருணம் என்று கூறிய ஜாம்ரி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.விபத்தில் சிக்கிய பேருந்து, யுபிஎஸ்ஐயால் அல்லாது, மாணவர்கள் தனியாக வாடகைக்கு எடுத்ததாகவும், தஞ்சோங் மலீம் நோக்கி திரும்பும் வழியில் நடந்ததாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.

Comments