மொபைல் தரவுகளை புள்ளிவிவரத்திற்காக பயன்படுத்தும் நாடுகளில் மலேசியா மட்டும் அல்ல என்று மலேசியா தொடர்பாடல் மற்றும் ஊடக ஆணையத்தின் துணை மேலாளர் தாத்துக் ஜுல்கர்னைன் முகமது யாசின் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் ஆதரவுடன் நடைபெறும் உலகளாவிய முயற்சியின் ஓர் பகுதியாக இது நடைபெறுகிறது. சர்வதேச அளவில் அனைத்து நெறிமுறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது கொள்கை மேம்பாடு மற்றும் தரவுக் காப்பீட்டுக்கு உதவுகிறது என அவர் கூறினார்.