Offline
Menu

LATEST NEWS

ஜோகூர் பொருளாதார மண்டலத்திற்கான செயற்கைக்கோள் நகரமாக குளுவாங் மாறும் என்று மந்திரி பெசார் நம்பிக்கை
By Administrator
Published on 07/08/2025 09:00
News

ஜோகூரில் உள்ள குளுவாங் நகரம் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் துணை நகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்  கிளாங் பள்ளத்தாக்கில் சிரம்பான் இருப்பதுபோல  என்று ஜோகூர் மந்திரி புசார் ஒன் ஹபீஸ் காசி இன்று கூறினார்.

இந்த மண்டலத்தின் வளர்ச்சி ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் 10 மாவட்டங்களிலும் உணரப்படும் என்றும் மேலும் பல செயற்கைக்கோள் நகரங்கள் உருவாக வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார மண்டலத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியின் தாக்கத்தை படிப்படியாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, குளுவாங்கில் உள்ள சிம்பாங் ரெங்காம், ரெங்காம் பகுதிகள் ஏற்கெனவே அதன் தாக்கத்தைக் காணத் தொடங்கியுள்ளன. இந்த முன்னேற்றம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும்.

சிரம்பான் கிளாங் பள்ளத்தாக்கின் செயற்கைக்கோள் நகரமாக அறியப்பட்டால், பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சியின் விளைவாக குளுவாங் முக்கிய செயற்கைக்கோள் நகரங்களில் ஒன்றாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் ரெங்காமில் ஒரு சுற்றுலா நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

உள்கட்டமைப்பு, முன்னேற்றத்தின் அடிப்படையில் எந்த மாவட்டமும் பின்தங்கியிருக்காது என்று ஒன் ஹபீஸ் கூறினார். பொருளாதார வளர்ச்சியை உந்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார மண்டலம் சுற்றுலாவிற்கு ஒரு ஊக்கியாகவும் செயல்படும் என்றும், ஜோகூர் வருகை ஆண்டுடன் இணைந்து மாநில அரசு ஜோகூர் முழுவதும் ஈர்ப்புகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

Comments