Offline
மலேசியாவில் வரலாறு படைக்கும் உலக பிகில்பால் சாம்பியன்ஷிப்
By Administrator
Published on 07/16/2025 09:00
Sports

மலேசியாவில்  முதல் முறையாக உலக பிகில்பால் சாம்பியன்ஷிப் (WPC) ஏசியா கிராண்ட் ஸ்லாம் தொடங்கி, 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி மலேசியாவில் நடந்த பெரிய பிகில்பால் போட்டியாகவும், உலகிலேயே மிகப்பெரிய WPC சாம்பியன்ஷிபாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் சமூக நலத்தை மேம்படுத்தும் இந்த விளையாட்டு அனைத்து வயதினரிடையும் பிரபலமாகி வருகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சர் அதம் அட்லி தெரிவித்துள்ளார். போட்டி மூலம் மலேசியா உலக தர போட்டி நடக்கும் இடமாகவும், சுமார் RM30 மில்லியன் பொருளாதார மதிப்பையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

விளையாட்டின் வளர்ச்சி வேகத்தில் மலேசியா ஆசியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக உலக பிகில்பால் சம்மேளன நிறுவனர் சேமூர் ரிப்கிண்ட் பாராட்டினார். போட்டி ஜூலை 20 வரை நடைபெறுகிறது; ரசிகர்களுக்கு நுழைவு இலவசம்.

Comments