கொழும்பு: இந்த வாரம் இலங்கை முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக உள்ள மத்திய மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இரவு முழுவதும் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் வீடுகள் மீது சரிந்து விழுந்ததில் 16 பேர் உயிருடன் புதைந்ததாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்தது.
அருகிலுள்ள நுவரெலியா மாவட்டத்திலும் இதேபோன்ற நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மரணங்கள் நாட்டின் பிற பகுதிகளில் பதிவாகியுள்ளன.
நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் 400-க்கு அருகிலான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 1,100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு பொருட்டு தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கெட்ட வானிலை காரணமாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த இறுதியாண்டு பள்ளித் தேர்வுகளை அரசாங்கம் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்குப் பகுதிகளில் சில இடங்களில் நவம்பர் 27 அன்று 250 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யும் என வானிலை துறை கணித்துள்ளது.
2024 ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கனமழையில் 26 பேர் உயிரிழந்ததிலிருந்து, இந்த வாரம் பதிவான உயிரிழப்பு இவ்வருடத்திலேயே மிக அதிகமானது. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 பேர் உயிரிழந்தனர்.