தைவானில் நடைபெற்ற சர்வதேச ரோபோடிக்ஸ் மற்றும் அறிவியல் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பள்ளி மாணவர்கள் 80 தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர். பினாங்கு மற்றும் ஜொகூர் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
இளம் வயதிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரவியல் துறையில் இவர்கள் காட்டிய ஆர்வம் நடுவர்களைப் பெரிதும் கவர்ந்தது. இன்று காலை மலேசியா திரும்பிய இம்மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியத் தமிழ் பள்ளிகளின் தரம் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. சாதனை படைத்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகைகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.