மலாக்காவின் ஜாசின் அருகே உள்ள AMJ நெடுஞ்சாலையில் பனைப் பழங்களை ஏற்றிச் சென்ற 3 டன் எடையுள்ள லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் இருக்கையிலேயே பலத்த காயமடைந்து சிக்கிக்கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அவரை மீட்கப் போராடியபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.