சிலாங்கூர், கோலா குபு பாரு பகுதியில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான தகராறு கொலையில் முடிந்தது. லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயது அண்ணனைத் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக, அவரது 26 வயது தம்பியைப் போலிசார் உடனடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலிசார் குற்றவியல் சட்டப் பிரிவு 302 (கொலை வழக்கு) கீழ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.