ஆப்பிரிக்காவில் இருந்து பயணித்த அகதிகள் படகு ஒன்று நடுவழியில் எரிபொருள் தீர்ந்ததால் அட்லாண்டிக் பெருங்கடலில் மவுரித்தானிய கடற்பகுதியில் தத்தளித்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 143 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 38 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.