போர்ட்டிக்சன், நெகிரி செம்பிலானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்துக்கு பின், TNB நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது. தீப்பரவல் 14 வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும், TNB ஊழியர்கள் அதிரடியாக செயல்பட்டு தீயை அணைத்ததாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் TNB நிர்வாக இயக்குனர் டத்தோ முகமது நஸ்ரி பாசில் தெரிவித்துள்ளார். தீ விபத்து மின் உற்பத்தி திறனை பாதிக்கவில்லை என்றும், 350 மெகாவாட் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.