Offline
கோவில் பிரச்சினைக்காக இந்தியர்கள் ஆயர் கூனிங் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள்: சரவணன்
By Administrator
Published on 04/15/2025 07:00
News

தாபா –தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை இருந்தாலும், ஆயர் கூனிங் இடைத்தேர்தலை இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்று மஇகா துணைத்தலைவர் சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் எதிர்மறையான எதிர்வினைகளை ஏற்படுத்தினாலும், தாபா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார். இந்த விஷயத்தில் புறக்கணிப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பிரச்சனை உணர்வுப்பூர்வமானதாக இருந்தாலும், தாபா போன்ற இடங்களில் இனம்-மதம் சார்ந்த 3R பிரச்சனைகள் அதிகமாக தாக்கம் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார். 130 வருட பழமையான கோவில், 50மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு மாற்றப்படும் என்றும், அதே பரப்பளவில் புதிய கோவில் கட்டப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

PSM வேட்பாளர் பவானிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகவும், வாக்காளர்கள் கட்சி அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என்றும் சரவணன் கூறினார்.

Comments