அலோர் கஜா: இரண்டு வாகனமோட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பார்க்கிங் தகராறு, உடல் ரீதியான மோதலாக மாறியதில், 82 வயது தாத்தா ஒருவர் படுகாயமடைந்ததாக அலோர் காஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 65 வயதுடைய ஒருவர் திங்கள்கிழமை (ஏப்ரல் 14) கைது செய்யப்பட்டதாக அலோர் காஜா OCPD கண்காணிப்பாளர் அஷாரி அபு சமா தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு மஸ்ஜித் தானாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இது நடந்தது. அங்கு இரண்டு மூத்த குடிமக்கள் ஒரு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சண்டையின் போது, வயதானவர் தள்ளப்பட்டு தரையில் விழுந்தார். அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) கூறினார்.
கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபர் இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கண்காணிப்பாளர் அஷாரி மேலும் கூறினார்.