பிரதமர் மோடி, ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, கானா பயணத்தை முடித்துவிட்டு இன்று டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டை சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரிடம் சந்தித்து, இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருதான "தி ஆர்டர் ஆப் தி குடியரசு விருது" பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் சார்பாக ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.