கடந்த வாரம் பாதுகாப்புப் பயிற்சியில் சுங்கை புலையில் விழுந்த போலீஸ் ஹெலிகாப்டரின் துண்டுகள் நாளை மீட்கப்பட உள்ளன. இன்று சம்பவ இடத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தை ஜொஹர் உள்துறை தலைவர் முகமது ஜைலானி மற்றும் சுபாங் விமான படை துணை இயக்குனர் அகமது லொக்மான் நடத்தினர். ராயல் மலேசிய கடற்படை டைவர்களும் கடற்படை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த கூட்டத்தில் விமான விபத்து விசாரணை, துறைமுகம், தீயணைப்பு, சுகாதார அமைச்சகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட 25 பேர் கலந்துக் கொண்டனர்.9M-PHG ஹெலிகாப்டர் மிட்சாடோம் 2025 பயிற்சியில் பங்கேற்று விழுந்தது. ஐந்து பணியாளர்கள் காயமடைந்தனர்; போலீஸ் RG தேவெந்திரன் கடுமையாக, அடிலின் லியூ சிகிச்சையில் முன்னேற்றம், மற்றோர் மூவர் நிலை நிலையாக உள்ளனர். அவர்கள் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.