Offline
Menu
RM55,000 மோசடி: சுற்றுலா நிறுவன பெண் பணியாளர் கைது.
By Administrator
Published on 07/17/2025 09:00
News

நெகிரி செம்பிலானில், சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றும் 20 வயது பெண், RM55,000 மதிப்பிலான ஹோட்டல் செலவுகளுக்கான போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக SPRM கைது செய்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024 பிப்ரவரி வரை தனிப்பயன்பாட்டுக்காக செலவிட்டதை நிறுவன செலவாக காட்டி போலி ஆவணங்கள் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்று இரவு SPRM அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்ட அவருக்கு, செரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜூலை 22 வரை 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு SPRM சட்டம் 2009ன் 18வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Comments