Offline
Menu
முறையற்ற விசாவுடன் 35 வெளிநாட்டவர்கள் கைது.
By Administrator
Published on 07/18/2025 09:00
News

ஜோகூர் பாருவில், செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இல்லாமல் பல்வேறு கடைகளில் பணிபுரிந்த 35 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 18-55 வயதுக்கு இடையில் இருப்பவர்கள். கைது செய்யப்பட்டோர் இந்தோனேஷியா, மியான்மர், பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களாக உள்ளனர். விசாரணைக்காக ஐந்து மலேசியர்களுக்கும் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளியேற அனுமதி இல்லாமல் அல்லது காலாவதியான அனுமதியுடன் மலேசியாவில் தங்கியிருந்த இந்த சந்தேக நபர்களை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் செட்டியா டிராபிகாவில் அழைத்துச் சென்றுள்ளனர்.

Comments