Offline
Menu
ஸாரா கைரினாவின் இரத்தக்கறை படிந்த ஆவணக் குறிப்பு சமர்பிப்பு
By Administrator
Published on 09/09/2025 18:19
News

மறைந்த ஒன்றாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் கையால் எழுதப்பட்ட குறிப்பை மதிப்பீட்டிற்காக ஒரு மனநல மருத்துவரிடம் அனுப்பவில்லை என்று ஒரு ஆவண ஆய்வாளர் இன்று மரண விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார். வேதியியல் துறையின் தடய அறிவியல் பகுப்பாய்வு மையத்தைச் சேர்ந்த நூருல் அதிகா நோ, 44, ஸாராவை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறார் சார்பாகப் பணியாற்றும் வழக்கறிஞர் ராம் சிங் விசாரித்தபோது இவ்வாறு கூறினார்.

ஸாரா தனது தாயிடம் தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்திய குறிப்புடன் கூடிய எக்ஸிபிட் Y9 என்ற ஆய்வறிக்கையை ராம் குறிப்பிட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.மநஅந்தக் குறிப்பை ஒரு மனநல மருத்துவர் மதிப்பாய்வு செய்ய பரிந்துரைக்கலாமா என்று கேட்டதற்கு, நூருல் அதிகா, “இல்லை” என்று பதிலளித்தார். காகிதத்தில் ஒரு கறை இருப்பதைக் கவனித்ததாகவும், ஆனால் அதை அடையாளம் காண முடியவில்லை என்றும் நூருல் அதிகா கூறினார்.

ஜனவரி 5, 2025 தேதியிட்ட மற்றொரு குறிப்பான எக்ஸிபிட் Y8 ஐ பகுப்பாய்வு செய்வதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும் அதில் உள்ள இரத்தத் தடயங்கள் முதலில் டிஎன்ஏ தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.

Comments