Offline
Menu
சிகாமாட் நிலநடுக்கங்களில் பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களுக்கு ஜொகூர் அரசு நிதியுதவி
By Administrator
Published on 09/12/2025 09:00
News

இஸ்கண்டர் புத்ரி,

சமீபத்தில் செகாமட் பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களில் பாதிக்கப்பட்ட 62 குடும்ப தலைவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் RM3,000 நிதியுதவி வழங்க ஜொகூர் அரசு தீர்மானித்துள்ளது என ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் தெரிவித்துள்ளார். இந்த உதவி தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) மூலமாகக் கூட்டிணைவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார் அவர்.

சிகாமாட் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, 62 வீடுகள், இரண்டு வழிபாட்டு இடங்கள் மற்றும் ஒன்பது அரசு அலுவலகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நிலநடுக்கம் ஆகஸ்ட் 24 அன்று நிகழ்ந்த உடனே, மாவட்ட அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் சமூக நலக்குழுக்கள் உடனடியாக சேத மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பொது வேலைத்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் செய்த தொழில்நுட்ப மதிப்பீடு அனைத்துப் பொதுச் சொத்துகளும் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும், தெனகா நேஷனல் பெர்ஹாட், பெட்ரோனாஸ், ரான்ஹில் SAJ மற்றும் ஜொகூர் நீர் ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகளும் சரியான நிலையில் செயல்பட்டு வருகின்றன எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய நிலநடுக்க தொடர் ஆகஸ்ட் 24 அன்று சிகாமாட் மற்றும் பத்து பஹாட் பகுதியில் நிலவிய 4.1 மதிப்பெண் கொண்ட அதிர்வோடு ஆரம்பித்து, ஆகஸ்ட் 27 முதல் செப் 3 வரை 2.5–3.4 மதிப்பெண் கொண்ட ஏழு அதிர்வுகள் தொடர்ந்தன. ஜொகூர் அரசு குறுகியகால நடவடிக்கைகளில், 24 மணி நேர பேரிடர் செயல்திறன் அறை செயல்படுத்தல், பொது விழிப்புணர்வு அறிவிப்புகள், நிலையான செயல்முறை (SOP) உருவாக்குதல் மற்றும் சமூக அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.

நீண்டகால திட்டங்களில், அனைத்து புதிய கட்டடங்களுக்கும் நிலநடுக்கத்திற்கு தகுந்த கட்டுமான தரநிலைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், நிலச்சரிவு பாதைகளைக் கண்காணித்து, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலநடுக்க அபாய வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும் மந்திரி பெசார் தெரிவித்தார்.

Comments