அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரும், தேர்தல் பிரசாரத்தில் பங்களித்தவருமான சார்லி கக் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
31 வயதேயான சார்லி சுமார் 3000 கல்லூரி மாணவர்கள் மத்தியில் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் மீதான கொலை வெறித் தாக்குதல் இது முதன்முறை அல்ல. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024ம் ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் போது தாக்குதலுக்கு ஆளானார்.
டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.