கோலாலம்பூர்:
கம்போங் சுங்கை பாரு (Kampung Sungai Baru) மறுவளர்ச்சித் திட்டம் தொடர்பான உண்மைகளை, பாஸ் (PAS) இளைஞர் பிரிவு, திரித்துக் கூறுவதாக, பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan – PH) இளைஞர் பிரிவு, இன்று, குற்றம் சாட்டியது.
இந்த நிலம் உண்மையிலேயே கையகப்படுத்தப்பட்டது, பெரிகாத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN) அரசாங்கத்தின்போது, நடந்தது என்று, அவர்கள் வலியுறுத்தினர்.
பினாங்கு, பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர், பக்கத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் (Woo Kah Leong), இந்த நிலம் கையகப்படுத்துதல், பெரிகாத்தான் நேஷனல் ஆட்சியில் இருந்தபோது, 1960-ஆம் ஆண்டு, நிலம் கையகப்படுத்தும் சட்டம் பிரிவு 8-இன் கீழ், ஜூன் 21, 2021-ஆம் ஆண்டு, அரசிதழில், வெளியிடப்பட்டது என்று கூறினார்.