Offline
Menu
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்: அமைதி காக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது!
By Administrator
Published on 09/13/2025 09:00
News

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாருவில், நேற்று நடந்த வீடுகள் வெளியேற்ற நடவடிக்கை, நீதிமன்ற உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக, மேற்கொள்ளப்பட்டது என்று, பிரதமர் துறை கூட்டுரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்தார். இந்த முடிவு, அரசாங்கத்தால், மட்டும் எடுக்கப்படவில்லை என்றும், இது நீதித்துறையின் உத்தரவின் பெயரில் எடுக்கப்பட்டது என்றும், எனவே அது மதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து, இந்த மறுவளர்ச்சித் திட்டத்திற்கு, ஒப்புக்கொண்டனர் என்றும், அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் திருப்தியடையாதவர்கள், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அதை எதிர்த்துப் போராட உரிமை உண்டு என்றும், அவர் நினைவூட்டினார்.

Comments