Offline
Menu
பள்ளி விடுமுறைகள் முடிவடைந்தாலும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவே உள்ளது.
By Administrator
Published on 09/22/2025 09:00
News

கோலாலம்பூர்,

நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வட-தெற்கு விரைவுச் சாலை (PLUS), கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலை, கிழக்கு கடற்கரை விரைவுச் சாலை (LPT) 1 மற்றும் 2, மேலும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள அனைத்து கட்டண நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து தடையின்றி இயங்கிவருகிறது.

“இன்று பள்ளி விடுமுறைகள் முடிவடைந்ததால், பலர் இன்னும் வீடு திரும்பும் பயணத்தை தொடங்காததால் சாலைகளில் பெரும் நெரிசல் ஏற்படவில்லை,” என அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும், உலூ லங்காட் பகுதியில் இருந்து அம்பாங்கை நோக்கி செல்லும் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையில் (EKVE) வாகன நெரிசல் சற்று அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், PLUS நெடுஞ்சாலையில் இன்று காலை ஏழு ஸ்மார்ட் லேன்கள் (smart lanes) செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments