Offline
கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங்கில் சட்டவிரோத குடியேறிகள் 176 பேர் கைது
Published on 01/24/2025 03:15
News

நேற்று கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை (JIM) நடத்திய சோதனையில் 176 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை, பொதுமக்களின் புகாரின் பேரில், கோலாலம்பூர் நகராண்மை கழகத்தின் (DBKL) ஒத்துழைப்புடன், இரவு 7.15 மணிக்கு துவங்கியது.

கைது செய்யப்பட்டவர்கள் 71 வங்களாதேசிகள், 60 மியன்மார்காரர்கள், 24 இந்தோனேசியர்கள், 16 நேபாளிகள், 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் சில ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு, குடிநுழைவு சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது. அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Comments