சென்னை திருவல்லிக்கேணியில் பிரபல குத்துச்சண்டை வீரர் தனுஷ் (24) கொலை செய்யப்பட்டார். பல்வேறு போட்டிகளில் வென்ற இவரை, வீட்டின் அருகே மர்ம நபர்கள் அரிவாளால் கொலை செய்துள்ளனர். அதிர்ச்சி அளித்த இந்த சம்பவத்தில், தனுஷின் நண்பர் அருணும் காயமடைந்தார். 9 பேர் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.