பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்ட பிறகு, விமானி கட்டுப்பாட்டை இழந்து பிசியான சாலையில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் விமான உரிமையாளர் உட்பட 2 பேர் பலி, மேலும் பலர் காயமடைந்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.