கோலாலம்பூர்:
மலேசியர்கள், 75 வயதைத் தாண்டியும் வாழும், ஆயுட்காலம், அதிகரித்துள்ளதால், ஓய்வூதியச், சேமிப்பை, அதிகமாக்கி, வருகின்றனர்.
ஊழியர் சேமநிதி வாரியம் EPF தன்னார்வப் பங்களிப்புகள் (voluntary contributions), சட்டப்பூர்வ, விகிதத்தை விட பெருமளவில் அதிகரித்துள்ளதாக, தெரிவித்துள்ளது.
தற்போது, 51 முதல் 55 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களில், 42% பேர், RM240,000 ரிங்கிட் என்ற, அடிப்படைச், சேமிப்பு, இலக்கை, அடைந்துள்ளனர்.
இது, இரண்டு ஆண்டுகளுக்கு, முன்பு, இருந்த, 36%-இல், இருந்து, உயர்ந்துள்ளது.
இருப்பினும், இபிஎஃப்’ அமைப்பு, தனது, புதிய, போதுமான ஓய்வூதிய வருமான கட்டமைப்பின் (Retirement Income Adequacy framework) கீழ், இந்த, இலக்கை, *2028-ஆம் ஆண்டிற்குள், RM390,000 ரிங்கிட் ஆக, உயர்த்தும்.
இதனிடையே 50 வயதில் உள்ளவர்களின், சராசரிச், சேமிப்பு, தற்போது, RM300,000 ரிங்கிட்டை தாண்டினாலும், ஒரு கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவைப்படும் மாதாந்திர RM2,690 ரிங்கிட் என்ற இலக்கை ஓய்வூதியம் பெறுபவர்கள் அடையத் தவறி விடலாம் என்று இபிஎஃப்’, ஒப்புக், கொள்கிறது.
ஐ-சாரான்’ (*i-Saraan*), ஐ-சூரி’ (i-Suri) போன்ற, தன்னார்வத், திட்டங்கள், இப்போது, பிரபலமடைந்து, வருகின்றன.
மேலும், எதிர்காலத்தில் பென்ஷன் ஓய்வூதியத் தொகை போன்ற மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதைப் பற்றியும் புத்ராஜெயா ஆலோசித்து, வருகிறது.